×

மாணவ, மாணவியருக்கு வைப்பு நிதி பத்திரம் கலெக்டர் வழங்கினார்

 

மதுரை, மார்ச் 12: மதுரையில் 36 மாணவ, மாணவியருக்கு ரூ.27 லட்சம் மதிப்பிலான நிரந்தர வைப்புநிதி பத்திரங்களை கலெக்டர் சங்கீதா நேற்று வழங்கினார். அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியரில் வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது குடும்பத்தின் வருமானம் நிரந்தரமாக முடங்கினாலோ, குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பயன்பெற தகுதிபெற்ற 36 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.27 லட்சம் நிரந்தர வைப்புநிதி பத்திரம் நேற்று வழங்கப்பட்டது. மதுரை மற்றும் திருமங்கலம் தொடக்ககல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் வைப்பு நிதி பத்திரங்களை கலெக்டர் சங்கீதா மாணவ, மாணவியருக்கு வழங்கினார். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘இந்த நிதி எங்கள் கல்விக்கு பேருதவியாக இருக்கும்’’ என்றனர்.

The post மாணவ, மாணவியருக்கு வைப்பு நிதி பத்திரம் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Collector ,Sangeetha ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...